/* */

ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 36 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
X

தமிழகத்தில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகள், பரிசோதனை விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழகத்தில், நேற்று ஒரேநாளில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 21 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 3 பேருக்கும், திருச்சியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிக்கா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 722 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. அதே நேரம், தொற்றால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 25 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில், நேற்று 321 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து, நேற்று 392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம், 34 லட்சத்து 16 ஆயிரத்து 376 பேர் குணம் அடைந்து உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 19 May 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்