/* */

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு

வரும் மார்ச் 31ம் தேதியுடன் அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு
X

இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதும், அவை படிப்படையாக விலகிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. எனவே, பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விதித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிகளை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.

வரும் 31ம் தேதியுடன், கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கிவிடலாம். எனினும், சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.

மேலும், கொரோனா பரவல் இன்னமும் இருக்கும் பகுதிகலில், கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 March 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!