தூத்துக்குடி மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா

X
By - Magizh Venthan,Reporter |10 April 2021 10:15 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 847 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 16 ஆயிரத்து 407 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 144 பேர் இறந்து உள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu