/* */

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; இன்று 144 பேருக்கு தொற்று

தமிழகத்தில் நேற்றைய தினத்தைவிட இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; இன்று 144 பேருக்கு தொற்று
X

இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெருந்தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79, பெண்கள் 65 என, மொத்தம் 144 பேர் கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, சென்னையில் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 56,317 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து இதுவரை 34 லட்சத்து 17,365 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 79 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. நேற்று பெருந்தொற்று பாதிப்பு 90 ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை