இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.33 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.33 லட்சம் பேருக்கு கொரோனா
X

பைல் படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை உள்ள 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய (22ம் தேதி) தினத்தைக் காட்டிலும் 4,171 பாதிப்புகள் குறைவு.

மேலும் 525 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். . 2,59,168 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,65,60,050 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,89,409 ஆக அதிகரித்துள்ளது. 21,87,205 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business