காய்ச்சல், இருமல் இருந்தாலே பரிசோதனை: அரசின் புது நெறிமுறைகள் வெளியீடு

காய்ச்சல், இருமல் இருந்தாலே பரிசோதனை: அரசின் புது நெறிமுறைகள் வெளியீடு
X
கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பான, புதிய நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில், கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பான, புதிய நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏதேனும் இருந்தால் பரிசோதனை நடத்த வேண்டும்; அறிகுறி இல்லையெனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை நடத்தப்படும்.

கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த இணை நோயாளிகளுக்கு பரிசோதனை கட்டாயம்; எனினும், தொடர்பில் இருந்தவருக்கு அறிகுறி ஏதும் இல்லை எனில் பரிசோதனை தேவையில்லை என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future