தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5,441 பேருக்கு கொரேனா, 23 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் புதிதாக 5,441 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,20,827ஆக அதிகரித்தது.
சென்னையில் 1,752, செங்கல்பட்டில் 465, கோவையில் 473, திருவள்ளூரில் 195, திருப்பூரில் 148 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 23 பேர் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,863ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,890 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,74,305 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 30,131 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu