கன்னியாகுமரி மாவட்டத்தில் 13ம் தேதி 124 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13ம் தேதி 124 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 124 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,266 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 52 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,447 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 266 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 553 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story