/* */

ஊழல் எதிர்ப்பு விதிகளின் கீழ் கிரிப்டோ வர்த்தகம்: இந்திய அரசு

பணமோசடி விதிகளை கிரிப்டோகரன்சிகளுக்கு நீட்டிப்பது, நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் இந்த சொத்துக்கள் மாற்றுவதைக் கண்காணிக்க அதிக அதிகாரம் அளிக்கும்.

HIGHLIGHTS

Cryptocurrency in Tamil
X

Cryptocurrency in Tamil

இந்தியாவின் பணமோசடி சட்டங்கள் பொருந்தும் என்று மார்ச் 7 தேதியிட்ட அறிவிப்பில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் ஃபியட் நாணயங்களுக்கு இடையேயான பரிமாற்றம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களுக்கு இடையேயான பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் சொத்துகளின் பரிமாற்றம் ஆகியவை பணமோசடி சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் இப்போது பணமோசடி விதிகளின் வரம்பிற்குள் வரும் என்று நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஒரு அறிவிப்பில், விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் பங்கேற்பது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. டிஜிட்டல் சொத்துக்களின் கண்காணிப்பை கடுமையாக்க அரசாங்கம் எடுத்த சமீபத்திய நடவடிக்கை இதுவாகும்.

மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் பாதுகாப்பு அல்லது நிர்வாகம் மற்றும் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் சலுகை மற்றும் விற்பனை தொடர்பான நிதிச் சேவைகளில் பங்கேற்பது ஆகியவையும் உள்ளடக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாட்டின் மத்திய வங்கி பலமுறை எச்சரித்தாலும், அது குறித்த முறையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா இன்னும் இறுதி செய்யவில்லை.


கிரிப்டோகரன்சிகள் போன்சி திட்டத்தை (ஒரு ஆரம்ப முதலீட்டில் புதிய முதலீட்டாளர்களுக்கு விரைவான வருமானம் அளித்து பாதிக்கப்பட்டவரை மிகப் பெரிய அபாயங்களுக்குள் ஈர்க்கும் திட்டம்) போன்றது என்பதால் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வருமான வரிச் சட்டத்தின்படி, 'விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்து' என்பது கிரிப்டோகிராஃபிக் வழிமுறைகள் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ உருவாக்கப்பட்ட எந்தத் தகவல், குறியீடு, எண் அல்லது டோக்கனைக் குறிக்கிறது (இந்திய நாணயம் அல்லது வெளிநாட்டு நாணயம் அல்ல).

இந்தியாவின் பணமோசடி விதிகளை கிரிப்டோகரன்சிகளுக்கு நீட்டிப்பது, நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் இந்த சொத்துக்களை மாற்றுவதைக் கண்காணிப்பதில் அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கும்.

மோடி தலைமையிலான அரசு, G-20 மன்றத்தின் தலைமையின் ஒரு பகுதியாக, கிரிப்டோகரன்சிகளால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதில் பரந்த உலகளாவிய உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

Updated On: 8 March 2023 11:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!