பட்ட பகலில் வீடு புகுந்து திருடிய பெண் கைது

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பெண் ஒருவர் புகுந்து, 11.5 பவுன் நகை மற்றும் ரூ.15,000 நகயை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்;

Update: 2025-04-22 09:30 GMT

ஈரோடு: சூரம்பட்டியில் கூலி தொழிலாளி நட்ராஜின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டு ரோடு, இந்திரா வீதியைச் சேர்ந்த நட்ராஜ் (வயது 50) என்பவரது இல்லத்தில், நேற்று முன்தினம் பகல்  வீட்டில் யாரும் இல்லாத நேரம் பெண் ஒருவர் புகுந்து, 11.5 பவுன் நகை மற்றும் ரூ.15,000 நகயைக் களவாடி சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திலிருந்து சுற்றுவட்டமாக உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு என்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ரமணி (வயது 34) என அடையாளம் காணப்பட்டார். இவர் தர்மராஜின் மனைவாவாக இருக்கிறார்.

போலீசார் பின்னர் ரமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 பவுன் நகை மீட்கப்பட்டதாகவும், வீடுகளில் புகுந்து திருடுவது தொடர்பாக ரமணிக்கு ஏற்கனவே பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்போது அவரிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News