ஓமலூர் மதுக் கடையில் சண்டை

"பாரில் வன்முறை,40,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதம்";

Update: 2025-04-07 11:00 GMT

பாரில் தகராறு: 4 பேர் 'அட்மிட்'

ஓமலூர் அருகே காமலாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள தனியார் மதுக்கடையில் நேற்று மதியம் வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மதுக்கடையை அப்பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜெயப்பிரகாஷ் நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் ஜெயப்பிரகாஷின் தம்பி ஜெய்ஹிந்த் மதுக்கடையில் இருந்தபோது, காமலாபுரத்தைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இச்சம்பவத்தை அறிந்த ஜெயப்பிரகாஷும் அவரது 60 வயதான தந்தை ராஜாவும் அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இதன்போது ராஜாவிற்கும் அருண்குமாருக்கும் காயம் ஏற்பட்டது.

சம்பவம் மேலும் விஸ்வரூபம் எடுக்காமல் இருக்க, கடை உரிமையாளர் மதுக்கடையை உள்பக்கமாக பூட்டிவிட்டு, ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகராறில் சுமார் 40,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தகராறில் காயமடைந்த ராஜா, ஜெய்ஹிந்த், ஜெயப்பிரகாஷ் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News