நகைக்காக இரட்டைக் கொலை – நகைக்காக முதிய தம்பதிக்கு பயங்கர மரணம்! மனதை உலுக்கும் ஈரோடு சம்பவம்!
விளக்கேத்தி அருகே உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியர் மீது, நகைக்காகக் கொலை நடத்தப்பட்ட சம்பவம் மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியது.;
விளக்கேத்தியில் இரட்டைக் கொலைக் கொந்தளிப்பு - நகைக்காக முதிய தம்பதியை கொன்ற 4 பேர் கைது :
ஈரோடு: ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி பகுதியில் நடந்த கொடூரமான இரட்டைக் கொலை சம்பவம் குறித்தும், அதனைச் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளக்கேத்தி அருகே உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியர் மீது, நகைக்காகக் கொலை நடத்தப்பட்ட சம்பவம் மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தற்போது 4 பேரை கைது செய்துள்ளனர்.
முதிய தம்பதியை திட்டமிட்ட வகையில் கொன்று நகைகளை பறித்த குற்றவாளிகள், சில நாட்களில் போலீசாரின் வேகமான விசாரணையில் சிக்கினர். தங்கள் பணி திறமையை மீண்டும் நிரூபித்த போலீசாரின் நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.