முடி மாற்று அறுவை சிகிச்சையில் இரட்டை மரணம்! பல் மருத்துவரால் நடந்த பரிதாபம் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்

துறைசாரா முறையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-05-17 10:50 GMT

முடி மாற்று அறுவை சிகிச்சையில் இரட்டை மரணம்! பல் மருத்துவரால் நடந்த பரிதாபம் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம் :

உத்தரப்பிரதேசத்தில் வலையில் சிக்கியிருக்கும் மருத்துவ மோசடிகளில் ஒரு புதிய திருப்பம், பல் மருத்துவர் ஒருவர், துறைசாரா முறையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் முடி குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், குறைந்த செலவில் முடி மாற்று சிகிச்சை செய்யப்படுவதாக கூறிய பல் மருத்துவர் ஒருவரிடம் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இருவரும் மரணமடைந்தனர்.

மரணங்களின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய தகுதி இல்லாதவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவம், இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாகி வருவது குறித்து மருத்துவ வட்டாரத்தில் கண்டனம் கிளம்பி உள்ளது.

Tags:    

Similar News