மதுபோதையில் செங்கல் அடுக்கில் படுத்த வாலிபர் – மறுநாள் சடலமாக மீட்பு
செங்கல் அடுக்குகளின் மேல் மதுபோதையில் படுத்தவர் மறுநாள் காலை தலைகுப்புற கீழே விழுந்த நிலையில் காணப்பட்டார்.;
மதுபோதையில் செங்கல் அடுக்கில் படுத்த வாலிபர் – மறுநாள் சடலமாக மீட்பு
ஈரோடு காவிரிக்கரை வைராபாளையத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 23), செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். கடந்த 5ம் தேதி இரவு, செங்கல் அடுக்குகளின் மேல் மதுபோதையில் படுத்துள்ளார்.
மறுநாள் காலை அவர் தலைகுப்புற கீழே விழுந்த நிலையில் காணப்பட்டார். உடலில் சிராய்ப்பு காயங்களும் இருந்தன.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.