சேலத்தில் தொடர்ந்த கொள்ளையடித்தவருக்கு குண்டாஸ்
2022 ம் ஆண்டிலிருந்து திருட்டு சமபாவங்களில் ஈடுபட்ட சஞ்சய் என்பவரை கைது செய்து அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு;
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த அந்தேரிப்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த சஞ்சய் (23) என்பவர், கத்தி காட்டி மிரட்டி, ரூ.5,000 பணத்தை வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணையில் இறங்கிய நிலையில், சஞ்சயை கைது செய்து காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
மேலும் விசாரணையில், சஞ்சய் மீது ஏற்கனவே 2022ம் ஆண்டிலிருந்து பல்வேறு வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருப்பதும், இதற்குப் பிறகும் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த காலத்திலும் 'குண்டாஸ் சட்டத்தில்' கைது செய்யப்பட்ட வரலாறும் இருப்பது போலீசார் முன்வைத்த விசாரணையில் வெளிப்பட்டது.
இந்த புதிய வழிப்பறி சம்பவம் மற்றும் முந்தைய குற்றப் பின்னணியை கருத்தில் கொண்டு, சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருவதால், சஞ்சயை மீண்டும் 'குண்டாஸ் சட்டத்தின்' கீழ் கைது செய்ய வேண்டும் என போலீசார் பரிந்துரைத்தனர். இதனை ஏற்று, சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநப் நேற்று உத்தரவு பிறப்பித்தார். தற்போது சஞ்சய் மீதான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.