சேலத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு

சத்துணவு ஊழியர்களால் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை;

Update: 2025-05-16 06:10 GMT

சேலத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒய்.எம்.சி. ஹாலில் நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு கோகுலநாதா பள்ளி அருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அர்த்தனாரி துவக்கி வைத்தார்.

மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தொகுப்பூதிய முறையில் நியமனத்துக்கான 95ஆவது அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்டவை அடங்கும். குறிப்பாக, பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானதாக இருந்தது.

இந்த மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, மாவட்ட தலைவர் லட்சுமி, செயலர் அமராவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

Similar News