அம்பேத்கர் சிலைக்கு உரிமை கோரி ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் சிலை திறக்க அனுமதி கோரி கெங்கவல்லியில் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-05-16 10:57 GMT

அம்பேத்கர் சிலை திறக்க அனுமதி கோரி கெங்கவல்லியில் ஆர்ப்பாட்டம்

கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் பஸ் ஸ்டாப்பில், நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு தரப்பினர் அம்பேத்கர் சிலையை நிறுவினர். எனினும், சிலையை திறப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து அந்த சிலையை மூடிவைத்தனர். அதன் பின்னர், சிலை திறக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு எதிராக மக்கள் தேசம் கட்சி சார்பில் நேற்று கெங்கவல்லி அண்ணாதுரை சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலர் கிருஷ்ணன் தலைமையிலான கட்சியினர், “சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் சிலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்” எனக் கோஷமெழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Tags:    

Similar News