தப்பிய கைதியை 25 நாட்களாக பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

மொபைல் போன்களை முற்றிலும் தவிர்த்து வருவதால் அவரை பிடிபத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்;

Update: 2025-04-21 10:50 GMT

ஈரோடு: பெங்களூரு மகள் ரூபிகான் (35) ஈரோட்டில் பல்வேறு இடங்களில் மொபைல் டவரின் ஒயர்களை திருடிய வழக்கில், வெள்ளோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 25ம் தேதி இரவு, ரூபிகானை மருத்துவ பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, அதேநேரம் வெள்ளோடு போலீசார் அவரை ஈரோடு விரைவு நீதிமன்றம்-1ல் ஆஜர்படுத்தி, பெருந்துறை கிளை சிறையில் ஒப்படைக்க சென்றனர். செல்லும் வழியில், ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ரூபிகான் தப்பிச் சென்று ஓடி விட்டார்.

இந்த சம்பவத்திற்கு 25 நாட்கள் ஆகி விட்டும், ரூபிகானை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். போலீசார் கூறியதாவது: ரூபிகான், பெங்களூரில் பதுங்கி இருக்கக்கூடும் என நாம் கருதுகிறோம். இதனால் பெருந்துறை சப்-டிவிசன் எஸ்.ஐ.க்கள் இருவர் பெங்களூரில் முகாமிட்டு இருக்கின்றனர். ரூபிகான், அவரது தாய், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மொபைல் போன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ரூபிகான் மொபைல் போன்களை முற்றிலும் தவிர்த்து வருகிறார். இதனால் அவரை பிடிபத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News