போராட்ட அறிவிப்பால் வீட்டுக்காவலில் உள்ள மாற்றுதிறனாளிகள்

சேலம் நகரில் போராட்டத்திற்கு கிளம்ப வருக்கும் மாற்றுத்திறனாளிகளை எச்சரிக்கை விடுத்தது, வீடு சிறையிலும் போன்ற நடவெடிக்கைகளி போலீசார் மேற்கொள்கின்றனர்;

Update: 2025-04-22 06:30 GMT

வீட்டு காவலில் மாற்றுத்திறனாளிகள்

சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை அவர்களின் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப 6,000, 10,000, 15,000 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அழைப்பு விடுத்து ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு திட்டமிட்டு, காவல்துறையினர் மூலம் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேற்றிரவு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சேலம் ஜங்ஷனில் மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட 20 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். மேட்டூரில் 29 பேரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தாலுகா தலைவர் ஜானை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். நங்கவள்ளியில் நாகேந்திரன் வீட்டுக் காவலில் உள்ளார். இடைப்பாடியில் காவல்துறை எச்சரிக்கையை அடுத்து 8 பேர் வீடு திரும்பினர்.

அதேபோல, நாமக்கல்லில் தலைவர் நாகேஸ்வரி, பரமத்திவேலூரில் செயலாளர் குணசேகரன், செங்கல்பட்டில் தாட்சாயணி, வேலூரில் ராஜேந்திரன், தஞ்சாவூரில் மாவட்டத் தலைவர் கஸ்தூரி ஆகியோர் வீட்டுக் காவலில் உள்ளனர். இவ்வாறாக தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News