கோவையில் பாலத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது பெயிண்ட் லாரி

கோவையில் பாலத்தில் இருந்து கவிழ்ந்த பெயிண்ட் லாரி தீ பிடித்து எரிந்தது.

Update: 2022-04-24 10:26 GMT

கோவை கருமத்தம்பட்டியில் பாலத்தில் இருந்த கவிழ்ந்த லாரி தீ பிடித்து எரிந்தது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை அருகே ஐதராபாத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பெயிண்ட் ஏற்றிக்கொண்ட வந்த  லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளானது‌. இதில் லாரியில் உராய்வு ஏற்பட்டு திடீரென லாரி முழுவதும் தீ பற்றிக்கொண்டது. லாரியை ஓட்டி வந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வந்து உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் எரிந்து உருகி சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயிண்ட் நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News