போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி விசிறியுடன் ஹெல்மெட் வழங்கள் - வெப்பத்தை சமாளிக்க புதிய முயற்சி! பேனுடன் கூடிய ஹெல்மெட் அறிமுகம்!
நவீன ஹெல்மெட்டுகள், உடல் வெப்பத்தை குறைத்து, காவலர்களின் வேலைத்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.;
வெப்பத்தை சமாளிக்க புதிய முயற்சி – போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி விசிறியுடன் ஹெல்மெட் வழங்கம் :
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைகளால் அவதிப்படும் போக்குவரத்துக் காவலர்களுக்கு அரசு புதிய நவீன உதவியை அறிமுகப்படுத்தியுள்ளது. சாலை மீது நீண்ட நேரம் கடும் வெப்பத்தில் பணிபுரியும் காவலர்கள், தங்களது ஹெல்மெட்டுகளிலும் சீருடையிலும் வெப்ப சுமையை அனுபவிக்கின்றனர். இதனை குறைக்கும் வகையில், பேட்டரி சக்தியுடன் இயங்கும் மின்விசிறி (battery fan) வசதி கொண்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நவீன ஹெல்மெட்டுகள், உடல் வெப்பத்தை குறைத்து, காவலர்களின் வேலைத்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படியான முயற்சி முதன்முறையாக செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஹெல்மெட்டுகள் சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.