ஈரோட்டில் ரயில்வே டிரைவர்கள் கோரிக்கை கூட்டம்
அகில இந்திய ரயில்வே ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன;
ஈரோட்டில் ரயில்வே டிரைவர்கள் கோரிக்கை கூட்டம்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, அகில இந்திய ரயில்வே ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் மே தினத்தையொட்டி சங்கக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், மண்டல செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பணியிட மாறுதல் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இருகூரில் உள்ள டிரைவர் அறையை, கோவை சரக்கு பிரிவுக்கு மாற்ற வேண்டும்.
வெளியூர் ரயில்களை இயக்கும் ஓட்டுநர்கள் 48 மணி நேரத்தில் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும்.