சேலம் மாவட்ட சத்துணவு மே பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற்றது
சேலத்தில் தற்போது காளியக உள்ள சத்துணவு மைய பணியாளர்கள் தேர்விற்கு நேர்முக தேர்வு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது;
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் செயல்படும் 63 அரசு பள்ளிகளில் தற்போது 21 சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முதல் கட்டமாக, 11 பள்ளிகளுக்கான சமையல் உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வை ஒன்றியக் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் சேலம் தெற்கு தாசில்தார் ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து நடத்தினர். 11 பணியிடங்களுக்கு மொத்தமாக 37 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 4 பேர் தவறினர். மீதமுள்ள 33 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த பணியிடங்களில், அரசமரத்து காட்டூர் அரசு பள்ளியில் உள்ள பணியிடம் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த விதவைகள் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதுபோல, வாழக்குட்டப்பட்டி அரசு பள்ளி பணியிடம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கானது. ஆனால் இந்த இரு ஒதுக்கீட்டுக்கேற்ப தகுதியான விண்ணப்பங்கள் வராததால், அந்த இரு பணியிடங்கள் மீண்டும் காலியாக அறிவிக்கப்படவுள்ளன. இதனால், மீதமுள்ள 9 பள்ளிகளுக்கான சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கே நேர்முகத் தேர்வு நடைபெற்றது. ஒன்றிய அதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்தபோது, தகுதியான விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், காலியான இரு இடங்களும் விரைவில் மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.