திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் விழா

ஆத்தூர்ல் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அம்மன் தங்கக் கவசத்துடன் மணக்கோலத்தில் காட்சியளித்தார்;

Update: 2025-05-15 09:50 GMT

திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் விழா பக்தி பூர்வமாக நடைபெற்றது

ஆத்தூர் தாயுமானவர் தெருவில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், வரும் நாட்களில் நடைபெற உள்ள தீமிதி விழா மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு திரவுபதி அம்மன் மற்றும் அர்ஜூன மகாராஜாவின் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்தையொட்டி, அம்மன் தங்கக் கவசத்துடன் மணக்கோலத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் ஆழ்ந்த பக்தியுடன் தங்கத் தாலிகளை அம்மனுக்கு வழங்கினர். மேலும், அர்ஜூனனுக்காகவும், அம்மனுக்காகவும் பக்தர்கள் ரூ.100 முதல் ரூ.1,000 வரை ‘மொய்’ எழுதி வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது, மூலவர் திரவுபதி அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருக்கல்யாணத்திற்குப் பிறகு, திரவுபதி அம்மன் மற்றும் அர்ஜூனன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவர் ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆத்தூர் டி.எஸ்.பி. சதீஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி முழுவதும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பக்தி பூர்வமாக வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News