தனியார் நிறுவன ஊழியர் திடீர் மாயம்

கோபியில், 19 வயது இளைஞர் வேலைக்குச் சென்று பின் வீடு திரும்பாததால், தந்தை போலீசில் புகார் அளித்தார்.;

Update: 2025-05-05 09:50 GMT

கோபியில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமாக மாயம்

கோபி அருகே திங்களூர் பகுதியில் உள்ள வடமாலைகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த தமிழரசு (வயது 19) என்பவர், வீரசங்கிலி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 30ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்று சென்ற இவர், அதன்பின் வீடு திரும்பவேயில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும், தமிழரசின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து அவரது தந்தையான செல்வராஜ், திங்களூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த இளைஞர் எங்கு சென்றார்? ஏதேனும் விபரீதம் நடந்ததா? என்ற கேள்விகள் நிலவி வருகின்றன.

Tags:    

Similar News