பண்ணாரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் புஷ்ப ரத ஊர்வலம்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தமிழ்புத்தாண்டு உற்சவத்தில் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-15 10:50 GMT

சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில்,  குண்டம் திருவிழா கடந்த ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் சிம்ம வாகனத்தில் புஷ்ப ரத ஊர்வலமும் சிறப்பாக நடந்தது.

அதனடிப்படையில், நேற்று தமிழ்புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் மறு பூஜை விழா நடந்தது. காலையில்   பக்தர்கள் குண்டத்தில் உப்பு, மிளகு தூவி, அம்மனை தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேற்றியோர், அம்மனுக்கு வேல் மற்றும் கம்பு  எடுத்து, உற்சவர் சப்பரத்துடன் கோவில் வளாகத்தைச் சுற்றி வந்தனர்.

மேலும், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்து, மண்ணியாட்டம் ஆடி பக்தி பரவசத்தில் கலந்து கொண்டனர். திருவிழா முழுவதும் பக்தி, ஆனந்தம் மற்றும் ஆன்மிக உற்சாகம் நிறைந்ததாக காணப்பட்டது.

Tags:    

Similar News