ஆம்னி பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு – இறந்தவர் யார்?அதிர்ச்சி கொடுத்த சம்பவம்!

தண்ணீர்பந்தல் பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது பஸ் மோதி தூக்கி வீசப்பட்டடு அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2025-05-14 09:30 GMT

ஆம்னி பஸ் மோதி முதியவர் பரிதாப மரணம் :

ஈரோடு:

சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட நேஷனல் ஆம்னி பஸ் ஒன்று, கடந்த 11ம் தேதி இரவு சத்தி சாலையில் சித்தோடு நோக்கி சென்றபோது, கனிராவுத்தர் குளத்தை கடந்ததும், தண்ணீர்பந்தல் பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியது.

பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் அடையாளம் தெரியாத முதியவர் ஆவார். அவருக்கு சுமார் 60 வயதாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் யார்? எங்கேயிருந்து வந்தவர்? எனும் தகவல்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News