கம்பு பயிரிடும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

மண் வளத்தை மேம்படுத்தும் ராய் பயிரிடும் வழிமுறைகள் குறித்து வசாயிகளுக்கு வேளாண் துறையின் முக்கிய ஆலோசனை;

Update: 2025-05-08 05:40 GMT

கோடையில் கம்பு சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ஆலோசனை

வீரபாண்டி வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தெரிவித்துள்ள அறிக்கையின்படி, குறைந்த நீர்பாசனத்தில் வளரக்கூடிய கம்பு பயிரை விவசாயிகள் கோடை பருவத்தில் சாகுபடி செய்து பயன்பெறலாம். அதிக விளைச்சலை தரும் ரகங்களான கோ-10, தனசக்தி மற்றும் வீரிய ஒட்டுரக கோ-9 ஆகியவற்றின் விதைகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு தேவையான 5 கிலோ விதைக்கு, ஒரு கிலோ உப்பை 10 லிட்டர் நீரில் கரைத்து, அதில் விதைகளை ஊறவைக்க வேண்டும். பின்னர் அடியில் தங்கும் விதைகளை நான்கு முறை கழுவி, நிழலில் உலர்த்தி, அவற்றில் பூஞ்சை நோய்கள் இல்லாதவைகளை தேர்வு செய்ய வேண்டும். அதனை அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 600 கிராம் சேர்த்து விதை நேர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விதைகளை 2% பொட்டாசியம் குளோரைடு அல்லது 3% சோடியம் குளோரைடு உப்பு கலவையில் 16 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைத்தால், முளைப்புத்திறன் மேம்படும். விதைப்பதற்கு முன்னும் பின்னும், 12.5 கிலோ நுண்ணூட்டக்கலவையை மண்ணுடன் கலந்து 50 கிலோவாக மாற்றி, விதைகள் மூடுமாறு பரப்ப வேண்டும். அதோடு, ஒரு ஹெக்டேருக்கு தழைச்சத்து 80 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ என உரங்களை சரிவர இடுவதும் மிக முக்கியம்.

Tags:    

Similar News