குறைதீர் கூட்டத்தில் ஒரே நாளில் 290 மனுக்களுக்கு மேல் குவிந்தன
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது;
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் – ஒரே நாளில் 290 மனுக்கள்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமண உதவித்தொகை, தீ விபத்து நிவாரணம், மயான வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
மொத்தம் 290 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.