ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம் – மே 16ம் தேதி பலர் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு!
மே 16ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.;
ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம் – மே 16ம் தேதி பலர் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு!
ஈரோடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், வரும் மே 16ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, எழுத்தறிவுடன் இருக்கும் நபர்கள், பட்டதாரிகள், செவிலியர், டெய்லர், கணினி ஆபரேட்டர்கள், தட்டச்சர், ஓட்டுனர் போன்ற தகுதியுடன் உள்ள விண்ணப்பதாரிகளை நேரில் தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 86754-12356, 94990-55942 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.