சேலத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது.;
குரூப் - 4 மாதிரித்தேர்வு: ஏராளமானோர் பங்கேற்பு
சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு குரூப் - 4 தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதிரி தேர்வு நேற்று நடத்தப்பட்டது.
அசல் தேர்வைப் போன்று, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடைபெற்றது. இம்மாதிரித் தேர்வில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். விடைத்தாள்கள் உடனடியாக திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட்டன.
இதுகுறித்து சேலம் மண்டல வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் மணி (பொறுப்பு) கூறுகையில், "குரூப் - 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஒரு பகுதியாக, 10 முழு மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தற்போது முதல் தேர்வு நடந்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக பயிற்சி பெறும்போது மாணவர்கள் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற உதவும்," என்றார்.