சிறுமியை கடத்திய டிரைவர் 'போக்சோ' சட்டத்தில் கைது

சேலத்தில் சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவரை கைது செய்தனர்.;

Update: 2025-05-16 08:30 GMT

சிறுமியை கடத்திய டிரைவர் 'போக்சோ' சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி, கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அதே பகுதியை சேர்ந்த சின்ன புதுார் வேன் டிரைவர் ரமேஷ் (வயது 40) சிறுமியை திருமணம் செய்யவுள்ளதாக கூறி கடத்திச்சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தேடலில், ரமேஷ் பெங்களூரில் இருப்பது தெரிய வந்தது.

அங்கு சென்ற போலீசார், ரமேஷை கைது செய்து, அவருடன் இருந்த சிறுமியையும் மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர். பின் அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் மீது *போக்சோ* சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறுமி பாதுகாப்புக்காக சிறப்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

Similar News