வனத்தில் இருந்து சாலைக்கு வந்த கரடி-பயணிகள் பதறி ஓட்டம்!பயமுறுத்தும் காட்சி வைரல்!வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை!
வனப்பகுதியிலிருந்து வெளிவந்த கரடி ஒன்று, சாலையோரமாக நடந்துசென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.;
சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த கரடி சாலையில் நடந்து உலா :
சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி செல்லும் சாலையில், நேற்று முன்தினம் ஒரு அதிசயமான நிகழ்வு நடந்தது. வனப்பகுதியிலிருந்து வெளிவந்த கரடி ஒன்று, சாலையோரமாக நடந்துசென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த நேரத்தில் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டியொருவர், கரடியின் நடமாட்டத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, வைரலாகி வருகிறது.
இதனைக் கண்ட பயணிகள், அந்த சாலையில் பயணம் செய்வதற்கு முன்னேச்சிக்கொண்டுள்ளனர். வனவிலங்கு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது என்ற எண்ணத்திலும் உள்ளனர். இதனால், பண்ணாரி வழியாகச் செல்லும் மக்கள் வனத்துறையினரிடம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.