சிறுமி குழந்தை பெற்றதால் அதிர்ச்சி போலீஸ் விசாரணை

Update: 2020-12-30 05:30 GMT

அருப்புக்கோட்டை அருகே 14 வயதான சிறுமி குழந்தை பெற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வசித்து வருபவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் திவ்யா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் சிறுமியின் கர்ப்பம் பற்றி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் சிறுமியிடமும் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கும் அவரது உறவினரான சின்னராசு என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரது உறவினர்களே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. 14 வயதேயான சிறுமி தற்போது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போதுதான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கியதாக சின்னராசுவை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags: