கோவில் குளத்தில் மூழ்கி இருவர் உயிர் இழப்பு

அரக்கோணம் அருகே சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் குளத்தில் தவறி விழுந்து இருவர் உயிரிழப்பு காவல்துறை விசாரணை.;

Update: 2020-12-13 09:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சோளிங்கர் அடுத்துள்ள கொண்ட பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் கார்த்திகை மாதம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா நடைபெறும்.


இக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பண்ருட்டி தாலுகா தட்டாம் பாளையத்திலிருந்து 10க்கும் மேற்பட்டோர் வேன் மூலமாக சோளிங்கர் வந்துள்ளனர். இவர்கள் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் சின்னமலை பாண்டவர் தீர்த்த குளத்தில் ஜெகன் (18), அபிநயா(15) குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் சடலத்தை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கொண்ட பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: