குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?

உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும்.

Update: 2024-04-30 15:56 GMT

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

தனுசு குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் பழமையான விஷயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது தொழில் ஸ்தானம் - விரைய ஸ்தானம் - தனவாக்கு ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். அவரது சிறப்புப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பத்து, பன்னிரண்டு, இரண்டாம் இடங்களில் பதிகின்றன. இத்தகைய அமைப்பினால் உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். புதிய பணி கைக்கு எட்டாமல், இருக்கும் பணியை உதற வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது அசட்டுத் துணிச்சலை விட அடக்கமே நல்லது. வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம்.

வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அசையும் அசையா சொத்து சேரும். கையிருப்பை ஆடம்பரத்தில் கரைக்க வேண்டாம். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். குழந்தை பாக்யம் வேண்டுவோர் குலதெய்வத்தை வணங்குவது நல்லது. தொழிலில் தொடர்ச்சியாக லாபம் வரும். சட்டப்புறம்பினை கனவிலும் நினைக்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். செயல்களில் நிதானம் இருக்கட்டும். அரசுத்துறை சார்ந்த பணியில் உள்ளோர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். மாணவர்கள், யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமை வெளிப்படும் அளவுக்கு வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வித்தைகாட்டல் வேண்டாம். அடிவயிறு, கீழ் முதுகுத் தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம். ராமர், சீதை, அனுமனை ஆராதிப்பது வாழ்வை இனிமையாக்கும்.

நட்சத்திர பலன்கள்

மூலம்:

இந்த குரு பெயர்ச்சியால் வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொல்படி நடப்பது நன்மை தரும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

பூராடம்:

இந்த குரு பெயர்ச்சியால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த குரு பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

Tags:    

Similar News