தொடர்ந்து சரிவை சந்திக்கும் பங்குச் சந்தைகள்.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 152 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது

Update: 2022-06-15 11:05 GMT

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கினாலும், பின்னர் ஏற்றம் கண்டது. ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

இன்று பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது இறுதியில் சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி.மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,772 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,521 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 149 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.244.64 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.11 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.18 புள்ளிகள் குறைந்து 52,541.39 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 39.95 புள்ளிகள் சரிந்து 15,692.15 புள்ளிகளில் முடிவடிந்தது

Tags:    

Similar News