நிதி அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்திய ஸ்டேட் வங்கி

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, நிதி அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது

Update: 2022-05-16 02:19 GMT

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), மே 15 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நிதி அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. .

மூன்று மாத கடன் வட்டி விகிதம்  முன்பு 6.75 சதவீதத்தில் இருந்து இப்போது 6.85 சதவீதமாக உள்ளது. இதேபோல், ஆறு மாத கடன் வட்டி விகிதம் 7.15 சதவீதமாகவும், ஓராண்டுக்கான கடன் வட்டி விகிதம் 7.20 சதவீதமாகவும், இரண்டு ஆண்டு கடன் வட்டி விகிதம் 7.40 சதவீதமாகவும், மூன்று ஆண்டு கடன் வட்டி விகிதம் 7.50 சதவீதமாகவும் உள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கொள்கை ரெப்போ விகிதத்தை 40 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து எஸ்பிஐயின் இந்த வட்டி உயர்வு ஏற்பட்டுள்ளது

கடன் வட்டி விகிதம் அதிகரிப்பின் விளைவாக, வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களை வாங்கியவர்களுக்கு , வரவிருக்கும் மாதங்களில் அவர்களின்மாதாந்திர தவணைகள் உயரும்.

ரிசர்வ் வங்கி இணக்கக் கொள்கையை (பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பண விநியோகத்தை விரிவுபடுத்த விருப்பம்) திரும்பப் பெற உள்ளதால், வரும் மாதங்களில் கடன் விகிதங்கள் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News