அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை - திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை

அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை - திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை
X

அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விலைப்பட்டியல் விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் முறையாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.

தவறும்பட்சத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உர விலை மற்றும் இருப்பு பலகையை விவசாயிகளின் பார்வையில் படுமாறு உரக்கடைகளில் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரவிலை இருப்பு பலகையில், புகார் தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்களை குறிப்பிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மேல் விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் உர உரிமமும் ரத்து செய்யப்படும்.

மேலும் யூரியா (45 கிலோ) மூடை ரூ.266.50- பொட்டாஷ் (50 கிலோ) மூடை -ரூ.1000 -க்கும் (ஆர்சிஎப் பொட்டாஷ் தவிர), DAP (50 கிலோ) மூடை விலை ரூ.1200 -க்கும், 20.20.0.13 காம்ப்ளக்ஸ் உரம் (50 கிலோ) மூடை ரூ.975 - முதல் ரூ 1150 - வரையிலும், சூப்பர் பாஸ்பேட் உரம் (50 கிலோ) மூடை ரூ.390- முதல் ரூ.420 - வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்சிஎப் பொட்டாஷ் 50 கிலோ மூடை விலை ரூ.875 க்கும் அம்மோனியம் குளோரைடு உரம் ரூ. 750 க்கும் அம்மோனியம் சல்பேட் உரம் ரூ. 850 க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

சில உரங்களின் விலை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபட்டு இருப்பதால் விவசாய பெருமக்கள் தனியார் உர விற்பனை நிலையங்களில் சென்று உரங்கள் வாங்கும் பொழுது மூடையில் அச்சடிக்கப்பட்ட கூடுதல் பட்ச விலையினை பார்த்து அதற்கு மிகாமல் வாங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்;கு செல்லும் போது அவர்களது ஆதார் அட்டையினை கொண்டு சென்று உரம் வாங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் உரம் வாங்கும் போது கட்டாயமாக உரம் வாங்கியதற்கான ரசீது கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளும் போது மண்வள அட்டை பரிந்துரையின்படி உரமிட வேண்டும்.

இது தொடர்பான புகார்களை தெரிவிக்க வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளவும். அவர்களது அலைபேசி எண் இத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

ஷீபா வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு 9944357706

உமா மகேஸ்வரி அம்பாசமுத்திரம் 9489477619

கற்பக ராஜ்குமார் சேரன்மகாதேவி 9942982578

சுப செல்வி முக்கூடல் 9442025935

முரளி ராகினி பாளையங்கோட்டை 9444107556

ஜாஸ்மின் லதா நாங்குனேரி 9486271166

வசந்தி களக்காடு 9442151397

சுனில்தத் வள்ளியூர் 6374254317

சுஜாதாபாய் இராதாபுரம் 9486652706

ஏஞ்சலின் கிரேபா மானூர் 9442338354

Next Story