பால் பண்ணை தொழிலை லாபகரமாக்க இந்திய அரசின் திட்டங்கள்

பால் பண்ணை தொழிலை லாபகரமாக்க இந்திய அரசின் திட்டங்கள்
X
பால் பண்ணை தொழிலை நிலையானதாகவும், அறிவியல் ரீதியானதாகவும், லாபகரமாகவும் மாற்ற இந்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள்

பால் பண்ணை தொழிலை நிலையானதாகவும், அறிவியல் ரீதியானதாகவும், லாபகரமாகவும் மாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் துணையாக, பின்வரும் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது:-

ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்

பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்

பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி

பால் கூட்டுறவு மற்றும் பால் தொழிலில் ஈடுபட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஆதரவு

கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடுத் திட்டம்

தேசிய கால்நடை இயக்கம்

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி

பொதுமுடக்கத்தின் போது பால் பண்ணையாளர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு இழப்பீடு வழங்க கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

2020-21 நிதியாண்டில் நடப்பு மூலதனக் கடன்களுக்கான வட்டி மானியம் என்ற வடிவில் ஒரு முறை ஆதரவை வழங்குவதற்கான புதிய கூறு அறிமுகப்படுத்தப்பட்டது.

பால் மற்றும் பால் பொருட்கள் பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் இயந்திரங்களை நவீனமயமாக்க, பால்வள மேம்பாட்டுக்கான மத்தியத் துறை திட்டம்.

பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்தல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான பால் உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் கடன் அட்டை.

உள்நாட்டு மாடுகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, மாடுகளின் மரபணுவை மேம்படுத்துதல் மற்றும் பால் உற்பத்தி மற்றும் மாடுகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் பால் உற்பத்தியை விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் நோக்கத்துடன் ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ 15000 கோடி மதிப்பிலான கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி.

ராஷ்டிரிய கோகுல் இயக்கத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 2316.14 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மாநிலங்களவையில் இந்த தகவல்களை தெரிவித்தார்.

Tags

Next Story
application of ai in agriculture