உணவு அளிப்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்: விவசாயிகள் இடையே உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சர்

உணவு அளிப்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்கேற்பு எங்களின் முன்னுரிமை என்ற மையக்கருத்துடன் நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகத்துடன் இணைந்து தென்னை மேம்பாட்டு வாரியம் தென்னை விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மெய்நிகர் வடிவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகள் இடையே உரையாற்றினார். நாட்டில் கிராமம் தொடங்கி வறுமை ஒழிப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
உணவளிப்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்கேற்பு எங்களின் முன்னுரிமை என்ற இயக்கத்தின் மூலம் விவசாயிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை அரசு உணர்ந்திருப்பதாக அவர் கூறினார். விவசாயிகள் பாதுகாப்பு என்பது தற்போதைய அவசியம் என குறிப்பிட்ட அமைச்சர், கிசான் கடன் அட்டை, பயிர் பாதுகாப்புத் திட்டம், மண் வள அட்டை போன்றவை விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் கைலாஷ் சௌத்ரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.சண்முக சுந்தரம், தென்னைக்கான திறன் மையத்தை தளியில் உள்ள வாரியத்தின் பண்ணையில் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினித், தென்னை வாரியத்தின் உறுப்பினர்கள் வேளாண் இணை இயக்குனர் ஆர்.வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 200 தென்னை விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி அமைப்புகளின் உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu